Saturday, 30 September 2017

மழையும் நானும் !

நடுநிசியில் பெய்த கனமழையில்..
வெந்திருந்த ஊர் தணிந்தது..
இந்த அதிகாலை பொழுதில்!
அந்த மெல்லிய சாரலில் ..
ஓர் நடைபயணம் மொட்டை மாடியில்....
அதில் நான் காண்பவை ;;;
எவனோ பைத்தியக்காரன் !
பெண்கள் இல்லாத வீட்டில்...
வாசல் தெளிப்பதே அரிது...
இதில்,மொட்டை மாடியேவே தெளிச்சிருக்கான் ....
மாடியில் தேங்கிய தண்ணீர்
குப்பைகளால் அடைபட்ட குழாயின் வழியே..
செல்ல முடியாமல் திணறுகிறது !
(ஒரு நிமிடம் எடுத்து விட்டு வந்துடுறேன்)
அடுத்து!!
அடுத்த பேய் மழை வருவதற்குள் ...
உடலை குலுக்கி எடுத்து ,சிறகை விரித்து
குளிர்காயும் காக்கா !
(நான் வேணும்னா துண்டு (towel) எடுத்துட்டு போகவா )
ஊடலுக்காக இணங்கும் ஒரு ஆண் வெறிநாய் கூட்டம் !
அதுவும் ஒரே ஒரு பெண் நாயிடம் !
Omg ! Its gang rape ....
பெண் அனுமதி இல்லாமல் தொடாதீர்கள் !
அது நாயாக இருப்பினும்...
என advise மட்டும் தான் கொடுக்க இயலுகிறது !
முடிந்தால் கல்லை எறிந்து ஆட்டையே கலைக்கலாம் ! பொறுத்திருந்து பார்க்கலாம் ...
நேற்று இருந்த இடத்தில் இருந்து ..
மரங்கள் எல்லாம் ஒரு பக்கமா சாய்ந்துள்ளது !
வீசி தள்ளிய காற்றில்....
நானும் முடிந்த அளவு தள்ளினேன் !!
நகர்வது மாதிரி தெரியவில்லை ....
சாலைகளில் ஆங்காங்கே இருக்கும்
குட்டைகளில் தேங்கிய மழைநீரை...
சமூக அக்கறையுடன் வெளியேற்ற...
சீறிட்டு பறக்கும் கார் ..
நல்ல வேளை அதன் அருகில் எவனும்
நடக்கவில்லை ! Super bro
மாடியே உரசிக் கொண்டிருக்கும்
பாப்பாளி மரத்தின் இலைகளில்
சின்ன சின்னதாய் நீர் குமிழிகள்!
விரலின் நூனியிலே உடைத்து தள்ளுகிறேன் !
ஈஈஈஈஈஈஈஈஈ
ஆக மொத்தம் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு நல்ல காலை பொழுது !
Good morning ...
             
                                @its_muthu