Friday, 17 November 2017

மாய தாரகை ...

           *** மாய தாரகை ***

மாய தாரகையே ...
நீ !
யாருடைய மங்கையே ?

உந்தன் விழிக்காகவே ...
பிரம்மனின் உழிகள் !
நிறைய மெனக்கெட்டு உள்ளது போல் ?

ஏனடி நீயும் ...
இது என்ன நியாயம் ?
எந்தன் விழியில் ..
இப்போது ... உந்தன் விழி .!!

******



இருண்டு போன வானத்தில் ..
வெள்ளை நிலா ..கண்டேன் இதுவரை !
இது என்னடி மாயம் ..
நான் செய்த யோகம் !!
வெள்ளை நிற படலத்தில் ..
கருப்பு நிலா ஒன்று !
அதுவும் ..
அங்கும் இங்கும் என சுழன்றுக்கொண்டு .!!
 
****
இரண்டு சிறைகளை (2 eyes) மட்டும்..
வைத்துக்கொண்டு !
இன்னும் எத்தனை பேரை அடைக்க ..
காத்து இருக்கிறாய் !!
என்ன குற்றம் செய்ய வேண்டும் ..
அந்த சிறையில் நானும் அடைபட !!!
.
.
.
ஆமாம் ..! அது என்ன சிகப்பு சிக்னல் ?
                              ( சிகப்பு பொட்டு )
தெரிந்துதான் வைத்துள்ளாயா ?
என்னாலும்  இந்த சிக்னலை சட்டென்று கடக்க முடியவில்லை ..
விதியே மீறி செல்லவும் விருப்பமில்லை !
 
****

ஆயிரம் கண்களை கடந்து இருப்பேன் !
இப்போது தான் காண்கிறேன் ..
முதல் கண்ணை ( likes an gun )
என் முன்னே !
அந்த கண் (gun ) ...துளைத்து விடுகிறது
எளிதாக ...
இறுகிப்போன என் கல் மனதையும் !
 
****

என்னை !
இந்த உலகத்தை மறக்க செய்துவிட்டு ..
உன் முகத்தை ஏனடி மறைக்கிறாய் ?
ஆடையினால் ...
என்னடி நீயும் !
இது என்ன நியாயம் ?
மாய தாரகையே !
நீ ...
யாருடைய மங்கையே ?


                                         

Sunday, 12 November 2017

கர்வம் அழிந்ததடி - 2 ! (A BOY WAITING FOR U )






இமை மூடியும்  வருகிறாய் ..
கனவிலே யுத்தம் செய்கிறாய் !
தினந்தோறும் ..
ஏனடி என்னை கொல்கிறாய் !!


நீ நீயாக இருந்தபோது ...
காதல் செய்தேன் !
நீயே இப்போது இல்லையென்றால் ...
நானும் என்ன செய்வேன் ..
............ எங்கே போவேன் !!



உன் அழுகை வந்தாலே..
நான் துடைப்பேனடி !
என் அழுகைக்கு காரணம்..
நீ என்பதையும் மறந்தேனடி !!



நான் கேட்கும் இசையெல்லாம் ..
ஒரே கீதம் !
அன்று..நீ சொன்ன வார்த்தை மட்டும் ..
என் கனவு தேசத்திற்கு தேசிய கீதம் !!



மழையாக நீ என்னை ..
நனைக்க வந்தாய் !
அணை கட்டி காக்கும் முன்பே..
விலகி சென்றாய் !!



சிறகு உடைந்த பறவையாக ..
நானும் இப்போ ...
.
.
உன்னருகே !!
பறந்திட போவது எப்போ ??



உன் கரம் கோர்த்து ...
நானும் !
நெடுந்தூரம் நடக்க வேணுமடி ...
.
.
கனவிலும் இது நடக்காது என்றால் ..
மனதினில் !
என்ன என்னமோ செய்ய தோணுதடி ...




எப்படி சொல்லிடுவேன் ..
என் வலியினை வார்த்தைகளால் !
உனக்கும் வேண்டாமடி இது ..
.
.
கடவுளிடம் கேட்டுகொள்கிறேன் ..
என் பிரார்தனைகளால் !!



நீ தந்த நினைவுகளை போதுமடி ..
என் வாழ்வின் மீதமும் ஏதோ போகுதடி ...
..
மொத்தத்தில் நான் கொண்ட ..
கர்வம் அழிந்ததடி !!
..
..
இப்போதாவது ..பெண்ணே ..
என் காதல் உனக்கு புரிந்ததா...டி ??