(அவள் -அம்மா .. அவர் -அப்பா ... அண்ணன் -அவன் .. இவையெல்லாம் அன்பின் வெளிப்பாடே )
மூத்தவனே ..
எனக்கு முன்னால் எல்லாம் அவனே ...
ஆம் !!
நான் குடியேறுவதற்கு முன்னால் ...
அவளின் கருவறை ..
அவளுடான தொப்புள் கொடி ..
அவளது மார்ப்பின் பால் ..
அவளின் தாலாட்டும் மடி ..
அவளின் கைப்பிடிச் சோறு ..
இன்னும் சொல்லப் போனால் !!
அவளின் அன்பு முத்தங்கள் மற்றும் பல ...
அதுபோலத்தான் ...அவருடனும்...
அவரின் மார்ப்பில் தூக்கம் ..
அவரின் தோள்களில் உப்பு மூட்டை ..
அவரின் மேல் யானை சவாரி ..
அவரின் அரவணைப்பு எல்லாம் ..
ஆனால், என்ன ?? இவையெல்லாம்
அவனுக்கு நிரந்தரமாக கிடைக்கவில்லை ..
அதை பங்கீட்டுக் கொள்ள
வந்த என் வருகையால் ..
எவ்வளவு பெரிய தியாகம் இவையெல்லாம் ..
அண்ணா ! Loves lot ..
********
அவன் !!
வெயிலிலும்,மழையிலும் ...
ஆடி ,பாடி ,ஓடி ...
குண்டி தெரிய கிழித்த டவுசர்களை எல்லாம் ..
ஒட்டுப்போட்டு தைத்துக் கொண்டு..
நான் ஆடுகிறேன் ,
அந்த வெயிலிலும் , மழையிலும் !!
அவன் !!
ஆசை..ஆசையாய் ..
வாங்கிய கலர் சட்டைகள் எல்லாம்
இப்போது என் வசம் ஆகிவிட்டது ..
அவன் எழுதிய சிலேட் ,
அவன் படித்த கோனார் தமிழ் கையேடு ..
முதற்கொண்டு ..
எனக்காக பத்திரமாக வைத்திருந்தார்கள் !!
இன்னும் சொல்லப்போனால் ..
என் வாழ்வில் வந்த முதல் நண்பன் ..
ஒரு ரூபாய்க்கு வாங்கிய மிட்டாயை
இரண்டாக பகிர்ந்துக் கொண்டோம் ..
டிவி ரிமோட்காக அடித்துக் கொண்டோம் ..
இதைப்பார்த்து அப்பா கை ஓங்கையில்
ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு
நலம் விசாரித்தோம் ..
எனக்காக விட்டுக்கொடுத்த ..
பேருந்தின் ஐன்னல் இருக்கை !!
அம்மா சுட்ட சூடான மொறுவலான எண்ணெய் தோசை ...
அவ்வளவு எளிதில் நினைவுகளிலிருந்து
அகற்ற இயலாது ..
********
வயது ஆக ஆக ...
அவன் அண்ணன் என்ற நிலையில் மட்டுமின்றி ..
என் வழி தவறவிடாது காத்திடும் அப்பாவாக !!
அறிவை வழங்கிடும் ஆசானாக !!
தோள் கொடுத்திடும் உற்ற தோழமையாக !!
அன்பு காட்டிடும் அம்மாவாக ??
இல்லை ! இல்லை !!
அந்த பொறுப்பை மட்டும் அவன் மனைவியிடம் வழங்கி விட்டான் ..
அதாங்க ..அண்ணி என்ற என் அம்மாவிடம் வழங்கி விட்டான் ..
என் உடன் பிறப்பை எனக்காக !!
இன்னும் என்ன என்ன ??
செய்யப் போகிறாய் ..
நீ தந்தவற்றையெல்லாம் என்னால் ஒரு போதும் தர இயலாது ..
உன்னை வாழ்த்தி அன்பு செலுத்துவதே தவிர ..