Sunday, 22 April 2018

இரண்டாம் இரவு

இன்றைய இரவு
வழக்கம் போல் இருக்காது !!
இமைகளும் உறங்காது !!
எனது இரண்டாம் இரவு ..

நான்
அந்த அறைக்குள் வந்தாயிற்று ..
அறை முழுவதும் மெளனமாயிற்று ..
தொங்குகின்ற பூக்கள் வாசனையற்று ..
தலையனைகள் கூட கனமாயிற்று ...

அவளிடத்தில் ..
இன்னொருவள் ... அவளாகவே
வர காத்திருக்கிறாள் ..

என் இதயத்தில் இடம் தேடியவள் ..
வீட்டுச் சுவற்றில் குடிபெயர்ந்து விட்டாள்..

அவளை நெருங்குகிறேன் முன்னோக்கி ..
நினைவுகள் எல்லாம் பின்னோக்கி ..

மணவறையில் இணைந்த கைகள் ..
முதலிரவில் தொடங்கிய ஊடல்கள் ..
அதன் விளைவாய் இரட்டை குழந்தைகள் ..
விபத்தில் சிதைந்த உடல் உறுப்புகள் ..
அவளின் ..
கல்லறையில் சிந்திய கண்ணீர்கள் ..

இரு குழந்தைகளுக்காக மட்டுமின்றி
மூன்றாம் குழந்தையாகிய எனக்காகவும்
தான் மறுமணம் ..

அவளுடன் பகலையும் இரவாக்கி
உயிர் கலந்திருக்கிறேன் ..
இருந்தும் ,
மனதளவில் ஒரு தயக்கம் !!
புது மங்கையினால் வந்த கலக்கம் !!
.
.
.

புதியவள் வந்துவிட்டாள் ..
என்னருகே வருவதற்கு முன்னால் ..
அவளே வணங்கிவிட்டு வருகிறாள்..

அருகில் அமர்ந்தவளுடன் ..
சில பல கதை பேசி ..
தேக உரசலில் மயிர் கூச ..
இரவை மேலும் இரவாக்க
விளக்கு அணைக்கப்படுகிறது !!

நான் கற்றுக்கொண்ட மொத்த
வித்தைகளையும் ..
அவள் சொல்லித் தந்த
சில மிச்சங்களையும் ..
அட்டவணை படுத்தி வைத்திருக்கிறேன்
மனதுக்குள் !!

முன்னவளுடனான..
முன் விளையாட்டுகள் எல்லாம்
முதலிரவில் மூர்க்கத் தனமாகவே
இருந்தது ..
ஆர்வ மிகுதியில் ,
அவளது காதினை கடிந்து விட்டேன் ..
அலறுகின்ற சத்ததில் "ஆ" என்றாள் ..
செய்வதறியாவது ..
Sorry என்றேன் !!

அறை அதிர சிரிக்கிறாள் ..
லுசு என சிணுங்குகிறாள் ...
இறுக்கி அணைத்து கொள்கிறாள் ..
வன்முறை செய்வதற்கு
ஏற்ற இடம் கட்டில் மட்டும் தான் போல் ..
இந்த முறை தெளிவோடு இருக்கிறேன் ..

சத்தமில்லாத
முத்தங்கள் பரிமாறப் படுகிறது ..
கழட்டப்படும் என தெரிந்தே
அவள் அணிந்து வந்த
அணிகலன்களும் ,
ஆடைகளும் ,
சீரான இடைவெளியில் வீசி
எறியப் படுகிறது ...

இப்போது அவள் நியாபகம் இல்லை ..
இருக்கவும் கூடாது ...
இருப்பின் ..
அது இவளுக்கு செய்யும் துரோகம் ..

ஆடையின்றி நிர்வாணமாய் இருப்பதால் ..
என் எழுத்துகளும் நிர்வாணமாக மாற போகிறது ..

வயதுக்கு வந்தோர்
படிக்கலாம் ..
வராதவர் வந்த பின்
படிக்கலாம் ..
துளியும் விருப்பமில்லாதவர்
இத்துடன் இதை புறக்கணிக்கலாம் ..

படைப்பின் சிறப்பு யாதெனில்
இரண்டு கைகளுக்கு
இரண்டு அங்கம் தான் !!

இறைவா ,
பத்து விரல் இருக்கிறேதே ..
அடுத்த முறையாவது படைக்கும் முன்
இதை கருத்தில் கொள் ..

மாறி .. மாறி ...
கட்டி, தழுவி
அணைக்க .. அணைக்க ..
வியர்வையால் உடல்
நனைய .. நனைய ...
சலசலப்பின்றி
இடைவிடாத சத்ததில்
கட்டில் ஆட்டம் ஆடுகிறது ..

மேல் மூச்சு
நான் விட ...
கீழ் மூச்சு
அவள்  விட ..
படுக்கையை மட்டுமின்றி
சுவாசித்தலையும் பங்கிட்டுக் கொள்கிறோம் !!

இரண்டாவது இரவில்
முதல் ஆட்டம்
வெற்றி தோல்வியின்றி முடிந்தது ..

இரண்டாவது ஆட்டம்
இடைவேளைக்குப் பின்
தொடரும் ..
இடைவேளையிலும் ஒரு ஆசை !!

அவளின் அடர் கூந்தல் இருட்டில் ..
என் முகம் புதைத்து துயில வேண்டும் ..
நான் விடும் பெருமூச்சில் !!
கூந்தலின் மயிரிழைகள் ..
மேலெழும்பி
பளார் ...பளார்.. என
கண்ணத்தில் அறைய வேண்டும்
இந்த இரவிலும் துயிலுவாய என ??

ஏனைய உறுப்புகள்
வரம்பு மீறி வம்பு செய்ய ..
கைவிரல்கள் மட்டும்
நட்புணர்வாய் பிசைந்து கொள்கிறது ..
அறை முழுவதும்
அவளது முனகல் ஒலி
இன்னிசையாய் எதிரொலிக்கிறது  ..

இரண்டாவது இரவில்
இரண்டு , மூன்று ஆட்டங்கள் முடிந்தபின்
எனது மார்பை
தலையணையாய் எண்ணி
தலை சாய்கிறாள் !!
ஒரு கையில் பற்ற வைத்த நெருப்பு ..
மறுபுறம் அவளின் நினைப்பு ...
இதற்கு மத்தியில்
இவளிடமிருந்து ஒரு கேள்வி ..

தப்பாக நினைக்க வேண்டாம் ..
மகிழ்வாய் இருந்தது
முதலிரவா ? இரண்டாம் இரவா ??

முதலிரவு என்றால் ..
இவளுக்கு வரும் சோகம் !!
இரண்டாம் இரவு என்றால் ..
அவளுக்கு செய்யும் துரோகம் !!

வேறு வழியில்லை ..

மூன்றாவது இரவையும்
பார்த்து விட்டு
பதில் சொல்லவா என்றேன் ...

பொறுக்கி ..என இதய வாசலை கையால் ஓங்கி குத்துகிறாள் ..

Sunday, 15 April 2018

கண்ணாமூச்சி ..ரே !! ரே !!

கண்ணாமூச்சி !!
ரே ... ரே...
கண்டுபிடி !!
ரே ... ரே ...

கண்ணாமூச்சி ஆட
போனவள்..
நிரந்தரமாக இமை மூடி
வருவாள் ..
என யார் நினைத்திருப்பார் ??

விளையாட்டுக்காக
எங்கேயாவது ஒளிந்திருப்பாள் ..
என்றிருந்தவர்களுக்கு !!

சுடுகாட்டுக்காக
மறைத்து வைக்கப்பட்டு உள்ளாள் ..
என பின்னரே தெரிந்தது !!

பிஞ்சுவை
பதம் பார்த்த ...
காவி நஞ்சுகளுக்கு !!
அந்த நீலகண்டனின் குடியிருப்பும்
துணை போயுள்ளது
வருத்தமே ..

உன் மதநல்லிணக்கம் என்பது
இந்து கோவிலின் கருவறையில் ..
முஸ்லிம் குழந்தைக்கு கல்லறை ..
கட்டுவதா ?

அந்த அரக்கனின் பிடியில் ..
அவள் என்ன செய்திருக்க முடியும் ?

அவளின் மழலை மொழியில்
காப்பாற்றுங்கள் ! காப்பாற்றுங்கள் !!
என கதறித் துடித்திருப்பாளோ ??

அய்யோ !!

அதன் அர்த்தம் தெரியாதே அவளுக்கு ..

வேறு என்ன சொல்லிருப்பாள் ??
பல ஆயிரம் அம்மா ..
சில ஆயிரம் அப்பா ..

அரக்கனின் செவிக்கு எட்டவில்லையா ??
அவனின் மதிக்கு தோணவில்லையா ??
தானும் !!
ஒரு குழந்தைக்கு அப்பா ..
ஒரு அம்மாவிற்கு குழந்தையென ..

               *****************

மானையும் , பெண்களையும்
வேட்டையாடுபவனுக்கு பெயில் ...
நீர்க்காகவும் , உரிமைக்காகவும்
போராடுபவனுக்கு ஜெயில் ..

நீதித்தாயே !!
உனக்கும் கண்ணாமூச்சி பிடிக்குமோ ??
இன்னும் எத்தனை காலம்
கண்மூடி இருக்கப் போகிறாய் ??

உன் தராசும்
சந்தைகாரனைப் போல் ..
ஏமாற்று வேலை செய்கிறது !!
டிஜிட்டல் இந்தியாவில்
உனக்கும் டிஜிட்டல் அளவு இயந்திரம்
வாங்கித் தர வேண்டும் போல் ..

நீதிமான்களே ..
தீர்ப்பு என்கிற பெயரில்
10 ரூபாய்
பேனாவின் முனையை உடைப்பதே
நிறுத்துங்கள் ..

மரணத்தை விட பெரியதாக
ஏதாவது தர முயலுங்கள் ..

இப்போதைய இந்தியா பற்றி
அப்போதைய பீம்ஜி - க்கு
தெரியாமல் போயிற்று ..
தெரிந்திருந்தால் !!
இந்த சிறார் குற்றங்களுக்கு
சாமானை சுட்டுத் தள்ள
சட்டம் எழுதியிருப்பார் ..

தூரத்தில் ஒரு சத்தம்
கண்ணாமூச்சி !
ரே .. ரே ...
கண்டுபிடி !!
ரே ... ரே ...

யாரும் தடுக்க வேண்டாம்
அவள் விளையாடட்டும் !!

8 வயது சிறுமிக்கு
அரை குறை  கௌவுன் தான் போட முடியும் !!

இவர்களுக்கு பயந்து ..

மீண்டும் சேலை உடுத்தி
மணமேடையில் உட்கார வைக்க முடியாது !!

ரே ... ரே....ரே...ரே....
ரே...ரே.....ரே....ரே....

Wednesday, 4 April 2018

வேண்டும் !! வேண்டும் !!

முழுவதும் படிக்க
நேரமும் , பொறுமையும்
உங்களுக்கு வேண்டும் ..




சுட்டெரிக்கும் வெயிலில் ..
கொட்டும் மழை வேண்டும் !!

கொட்டுக்கின்ற மழையில் ..
நீர்ப்பிடிப்பு அணைகள் நிரம்ப வேண்டும்!!

மேலும் மழை பொழிய வேண்டும் ..
அணைகளின் ஆயுளுக்கு ஆபத்து வர வேண்டும் !!

அப்போது 
அவன் திறந்து விட்டுத் தான் ஆக வேண்டும் ..

உன் தண்ணீரை நீயே வைத்துக் கொள் !!
என,
தன்மான தமிழன் சொல்ல வேண்டும் !!

தன் தவறை அப்போதாவது ..
கன்னடனோ ? மலையாளனோ ?
உணர வேண்டும் ..

உபரி நீர் தருவதை 
நிறுத்திட வேண்டும் ..
உரிமை பெற்ற நீரை 
குறைவின்றி தந்திட வேண்டும் ...

மேலாண்மை வாரியங்கள் எல்லாம்
நல வாரியமாக மாற வேண்டும் !!

இதை வைத்து கபட நாடகமாடிய
திராவிட கட்சிகள் எல்லாம் ..
நாடு கடத்தப் பட வேண்டும் !!

விரிந்திரிக்கும் கைகள் எல்லாம் ..
சுருங்கிப் போக வேண்டும் !!

நம் கனவிலாவது
தாமரை மலர்ந்திட வேண்டும் !!

இன்று இருக்கும் சூழ்நிலைக்கு
தமிழகத்தை வீரப்பன் ஆண்டிருக்க வேண்டும் !!

சிலைகளின் ..
தலை கொய்வேன் ..
என சூளுரைத்தவனை தட்டிக் கொடுக்க ..
வெண்தாடி கிழவனின் தடிகளுக்கு உயிர் வந்திருக்க வேண்டும் !!

அப்புறம் ... இதுவும் வேண்டும் ..


****

பாலியல் தொல்லை என இடம்பெறாத ..
செய்தித்தாள் காண வேண்டும் !!

ஒரு நடுநிசி இரவில் ..
செல்லாத நோட்டு போல ..
செல்லாத தலைவர்கள் என பட்டியல் அறிவிக்க வேண்டும் !!

"பூணை மேல் மதில் "
என..
புதிய பழமொழிகள் பிறக்க வேண்டும் !!

உண்ணாவிரதப் போரட்டங்களில் ..
மூன்று நேர உணவு இடைவேளை ..
கண்டிப்பாக வேண்டும் !!

தொழிலதிபர்கள் ..
வாங்கிய லோனை கட்ட வேண்டும் ..
விவசாயிக்கு ..
உரிய மரியாதை தந்துவிட வேண்டும் ..

அத்தனை கம்பெனி வாசல்களிலும் ..
"WANTED ENGINEERS " என்ற பலகை
தொங்க வேண்டும்  !!


*****

எங்களுக்கு எதற்குடா
ஸ்டெர் "லைட்" ??
வெளியேற மறுத்தால் ..
உனக்காகவும் உயர்த்தி  காட்டப்படும் ப்ளாஷ் "லைட்" (flash light)...




பூமியின் ஆழம் அறிந்து
மீத்தேன் எடுத்தாய் !!
மண்ணிற்கும் , மனிதனுக்கும் உயிர்
உள்ளதை ஏன் மறந்தாய் ??

எங்களின்
போராட்டங்கள் எல்லாம்
கொண்டாட்டங்களாக  மாற வேண்டும் !!

ஒற்றுமையாக போராடும் குணம் ..
பெருகிட வேண்டும் !!
நம்மை அழிக்க நினைப்பவனுக்கு ..
அதுவே முடிவாக அமைய வேண்டும் !!
வேண்டும் !! வேண்டும் !!


முழுவதுமாக படித்திருந்தால் விமர்சனம் செய்ய வேண்டும் ...