Saturday, 21 July 2018

குடிசையின் இன்பத்துப்பால் ...

தென்னை மரம்
அதை ஒட்டி குடிசை ..
மஞ்சள் நிற ஒளியில் குண்டு பல்பு
நார் கட்டிலில் தலைவன்
சாணி மொழுகிய தரையில்
முந்தானையை விரித்து தலைவி ..

தலைவன்
குப்புறப்படுத்தும்
குளிர்காய்ந்தப் பாடில்லை ..
இருக்கவே இருக்கிறாள் !!
இதில் எதுவும் தப்பில்லை ...

கட்டியிருந்த வேட்டியை
கழட்டி வச்சிட்டு ,
தவளை சைகையில் அழைப்பு ..
அசைந்தபாடில்லை !!
ஏதேதோ சத்தமிட்டும்
மசிந்தபாடில்லை !!

மேனி தொட்டு அழைக்கிறான் ..
விழியிலேயே விண்ணப்பம் வைக்கிறான் ..
அவன் அழைப்பதும் ,
அவள் ஆசைக்கு இணங்குவதும் ,
சில நேரம் அன்பினால்
பல நேரம் ஆணையினால் ...

யாருமில்லாத போதும்
குண்டு பல்பு அணைக்கப்படுகிறது ..
ஐன்னலும் அடைக்கப்படுகிறது ..
.
.
உச்சிந்தனை முகர்ந்து
தலைமுடியை விரல் கோதி
முகம் புதைத்து
தேன் உறிஞ்சி
சின்னஞ்சிறு கதைபேசி
ஆட்டம் தொடங்குவது எல்லாம்
இந்த குடிசையில் கிடையாது !!
.
.
எப்போதுமே ,
வெட்டு ஒன்னு ..
துண்டு ரெண்டு தான் ...
.
ஆமாம் !! ஆமாம் !!
வெட்டு ஒன்னு ,
துண்டு ரெண்டு தான் ..
கணக்கும் சரிதான்

களை எடுப்பது போல்
முடிச்சு அவிழ்த்து
ஏர் தழுவுகிறான் ..
முனகல் சத்ததினால்
கடிகார நொடி முள் ,
ஒய்வுபெறுகிறது !!
கட்டிலின் நார்
மெல்ல மெல்ல வலிதாங்காது
அறுபடுகிறது !!

இயற்கையின் நியதி
களைப்பு நீங்கி
உடல் தெம்பு பெற ..
இந்த கட்டிலில்
தெம்பு இழந்து
களைப்படைய வேண்டும் ,
என்பதே ..

ஆட்டம் தொடங்கிய இடத்திலேயே
முடிவடைவது ஊடலின் சிறப்பு ..
குண்டுபல்பை எறியவிட்டு
கழட்டிய வேட்டியை தலைவன் தேட ..
தலவிரிக்கோலத்தை
கொண்டையிட்டு தரைக்கு போய்ட்டா
தலைவி !!

Thursday, 12 July 2018

நா. முத்துகுமார் !! - பேரன்பு

என் வாழ்வியலில் நா.முத்துகுமார் ..❤

தமிழுக்கும் , தமிழ் சினிமாவுக்கும் இவன்
ஒரு " அழகு குட்டிச் செல்லம் " 

"உன் பெயரை சொல்லும் போதே "  மனதிற்குள் ஏதோ ஒரு அன்பின் ஊற்று
வெளிப்படுகிறது ..

"கண் பேசும் வார்த்தைகளை"
உன் விரல்கள் பேசிய போது .. உனது ரசிகன் ஆனேன் ..

" தூர் " கவிதையினால் எத்தனை பேர் மனதை தூர் வாரி அவன் ஆணவத்தை அழித்துள்ளாய் ..

"பூக்கள் பூக்கும் தருணமும் "
உன் பேனா சிந்தும் தேன் துளிக்காக தான் காத்துக் கொண்டிருக்கிறது ..

" வெயிலோடு விளையாடி "
உந்தன் கைவிரல் கவியோடு உறவாடி
எந்தன் நிகழ் காலம் , எதிர் காலங்களை நோக்கி செல்கிறது ..

" ஆரிரோ ஆராரிரோ " இது எனக்கான
உந்தன் தாலாட்டு ..

உன் பேனா உடைப்பட்டு ..
"ஒரு கல்லும் .. ஒரு கண்ணாடியுமே" உடையாமல் மோதிக் கொண்டு காதல் செய்கிறது என்றால் ??

"நெருப்பு வாயினில் "
நீ சிக்குண்டாய் என்ற செய்தி காதில் வந்து விழுகிறது ..

அந்த தொலைக்காட்சி நேரலையில் காண்கிறேன் .. உனது இறுதி ஊர்வலத்தை .. 
" வேடிக்கை பார்ப்பவனாகிய " உன்னை இந்த உலகமே செய்வதறியாது வேடிக்கை பார்க்கிறது ..

" போகாதே " " போ...கா....தே " ..
நீ இருந்தால் நான் இருப்பேன் .. கத்தி சொல்ல முயல்கிறேன் .. உனக்கு கேட்குமா என்பதறியாது .. ?

நீ சொன்னது போல் ... " தெய்வங்கள் எல்லாம் தோற்றே போனது "
உன் பேரன்புக்கு முன்னால் ...

ஏய் ... " பறவையே எங்கு இருக்கிறாய் " என தேடப் போவதில்லை  நான் ..
நீ என்னோடு தான் இருக்கிறாய் ..என் வலியோடு , உணர்வோடு இன்னும் !!

" ஒரு நாளில் " முடிந்துவிடுமா ?? உன் வாழ்வும் , உந்தன் கவியும் ..

"இன்னும் ஒரு இரவு ... இதோ ... இதோ "
என உன் நினைவோடு கடந்து சென்று கொண்டிருக்கிறேன் ..

நீ மீட்டிய "ஆனந்த யாழை " இன்னும் ரீங்காரித்துக் கொண்டு தான் உள்ளது ...

@யுவன்_முத்து