தென்னை மரம்
அதை ஒட்டி குடிசை ..
மஞ்சள் நிற ஒளியில் குண்டு பல்பு
நார் கட்டிலில் தலைவன்
சாணி மொழுகிய தரையில்
முந்தானையை விரித்து தலைவி ..
தலைவன்
குப்புறப்படுத்தும்
குளிர்காய்ந்தப் பாடில்லை ..
இருக்கவே இருக்கிறாள் !!
இதில் எதுவும் தப்பில்லை ...
கட்டியிருந்த வேட்டியை
கழட்டி வச்சிட்டு ,
தவளை சைகையில் அழைப்பு ..
அசைந்தபாடில்லை !!
ஏதேதோ சத்தமிட்டும்
மசிந்தபாடில்லை !!
மேனி தொட்டு அழைக்கிறான் ..
விழியிலேயே விண்ணப்பம் வைக்கிறான் ..
அவன் அழைப்பதும் ,
அவள் ஆசைக்கு இணங்குவதும் ,
சில நேரம் அன்பினால்
பல நேரம் ஆணையினால் ...
யாருமில்லாத போதும்
குண்டு பல்பு அணைக்கப்படுகிறது ..
ஐன்னலும் அடைக்கப்படுகிறது ..
.
.
உச்சிந்தனை முகர்ந்து
தலைமுடியை விரல் கோதி
முகம் புதைத்து
தேன் உறிஞ்சி
சின்னஞ்சிறு கதைபேசி
ஆட்டம் தொடங்குவது எல்லாம்
இந்த குடிசையில் கிடையாது !!
.
.
எப்போதுமே ,
வெட்டு ஒன்னு ..
துண்டு ரெண்டு தான் ...
.
ஆமாம் !! ஆமாம் !!
வெட்டு ஒன்னு ,
துண்டு ரெண்டு தான் ..
கணக்கும் சரிதான்
களை எடுப்பது போல்
முடிச்சு அவிழ்த்து
ஏர் தழுவுகிறான் ..
முனகல் சத்ததினால்
கடிகார நொடி முள் ,
ஒய்வுபெறுகிறது !!
கட்டிலின் நார்
மெல்ல மெல்ல வலிதாங்காது
அறுபடுகிறது !!
இயற்கையின் நியதி
களைப்பு நீங்கி
உடல் தெம்பு பெற ..
இந்த கட்டிலில்
தெம்பு இழந்து
களைப்படைய வேண்டும் ,
என்பதே ..
ஆட்டம் தொடங்கிய இடத்திலேயே
முடிவடைவது ஊடலின் சிறப்பு ..
குண்டுபல்பை எறியவிட்டு
கழட்டிய வேட்டியை தலைவன் தேட ..
தலவிரிக்கோலத்தை
கொண்டையிட்டு தரைக்கு போய்ட்டா
தலைவி !!