கதையாடல்
#சிகப்புரோஜாக்கள்
பூத்துக் குலுங்குவதெல்லாம்
ரோஜாக்கள் யல்ல ..
ரோஜாக்களாக இருப்பனயாவும்
சிகப்பு ரோஜாக்கள் யல்ல ..
இவன் விழிகளுக்கு
குண்டு மல்லியாகியினும்
செக்க சிவந்த சிகப்பு ரோஜாக்களே !!
ரோஜாக்கூட்டங்களே
மன்றாடி நிற்கிறது
குத்துங்கள் எஜமான் குத்துங்களென !!
வண்டுகளின் விருப்பத்தேன்
நான் மட்டுமே !!
என்கிற கர்வ மிகுதி
அந்த ரோஜாக்களுக்கு...
கர்வத் தேனை
மட்டுமே ...
இதழோடு இதழ் பதித்து
உறிஞ்சுகிறான் !!
பஞ்சணையில்
வஞ்சனையுடன்
விளையாடுகிறான் !!
கண்ணொளியில் பட்ட
சிகப்பு ரோஜாக்களை
காணொலியாய்
படம் பிடித்து
மற்ற விழிகளுக்கு
விருந்து வைக்கிறான் !!
கொலைகளும்
ஆயக் கலைகளில் ஒன்றாகிவிட்டது
இவனுக்கு ..
ரோஜாக்களின் காம்பினை
அறுக்கின்ற வேளையில்
வழிந்தோடுகிற குருதியே
அந்த
மியாவ் மியாவ் பூனைக்கு
ஒரு வாரகால உணவாகிறது ...
தன்னைத் தானே
அடக்க நினைத்தும்
அத்துமீறி நிற்கிறான் ..
இவன் பாதையெங்கும்
காலி மதுக்குப்பிகளில்
வளர்க்கப்படுகிற சிகப்பு ரோஜாக்கள் ..
பாவம் ,
இவன் என்ன செய்வான் ?
தன் நாட்குறிப்பை
எழுதுகின்ற மதிற்சுவர் முழுவதும்
நிரம்பி வழியும் சொற்களாய்
மீண்டும் .. மீண்டும் ...மீண்டும் ..
மீண்டும் .. மீண்டும் ... மீண்டும்..
மீ..ண்..டு..ம்..
............................... !!
#சிகப்புரோஜாக்கள்
பூத்துக் குலுங்குவதெல்லாம்
ரோஜாக்கள் யல்ல ..
ரோஜாக்களாக இருப்பனயாவும்
சிகப்பு ரோஜாக்கள் யல்ல ..
இவன் விழிகளுக்கு
குண்டு மல்லியாகியினும்
செக்க சிவந்த சிகப்பு ரோஜாக்களே !!
ரோஜாக்கூட்டங்களே
மன்றாடி நிற்கிறது
குத்துங்கள் எஜமான் குத்துங்களென !!
வண்டுகளின் விருப்பத்தேன்
நான் மட்டுமே !!
என்கிற கர்வ மிகுதி
அந்த ரோஜாக்களுக்கு...
கர்வத் தேனை
மட்டுமே ...
இதழோடு இதழ் பதித்து
உறிஞ்சுகிறான் !!
பஞ்சணையில்
வஞ்சனையுடன்
விளையாடுகிறான் !!
கண்ணொளியில் பட்ட
சிகப்பு ரோஜாக்களை
காணொலியாய்
படம் பிடித்து
மற்ற விழிகளுக்கு
விருந்து வைக்கிறான் !!
கொலைகளும்
ஆயக் கலைகளில் ஒன்றாகிவிட்டது
இவனுக்கு ..
ரோஜாக்களின் காம்பினை
அறுக்கின்ற வேளையில்
வழிந்தோடுகிற குருதியே
அந்த
மியாவ் மியாவ் பூனைக்கு
ஒரு வாரகால உணவாகிறது ...
தன்னைத் தானே
அடக்க நினைத்தும்
அத்துமீறி நிற்கிறான் ..
இவன் பாதையெங்கும்
காலி மதுக்குப்பிகளில்
வளர்க்கப்படுகிற சிகப்பு ரோஜாக்கள் ..
பாவம் ,
இவன் என்ன செய்வான் ?
தன் நாட்குறிப்பை
எழுதுகின்ற மதிற்சுவர் முழுவதும்
நிரம்பி வழியும் சொற்களாய்
மீண்டும் .. மீண்டும் ...மீண்டும் ..
மீண்டும் .. மீண்டும் ... மீண்டும்..
மீ..ண்..டு..ம்..
............................... !!