அரை மணி நேரமாக மழையே வேடிக்கை பார்த்த நான்...என்னைப் போல் மற்றவர்கள் இதை நேரத்தில் என்ன செய்வார்கள் ...என்று எண்ணி..
"மழையும் ! இவர்களும்! "
** பயிர் இடுவதற்காக நிலத்தை உழுது கொண்டிருந்த உழவன் ..முதல் மழைத்துளி அவன் வேர்வை படிந்த மார்பில் விழுந்த கணம் ...தலையில் இருந்த துண்டை கழற்றி..வானத்தை பார்த்து கை எடுத்து கும்பிட்டு..மண்ணை பூசிக் கொள்ளலாம்..நெற்றியில் !
** கடலுக்கு மீன் பிடிக்க சென்ற கணவன் பத்திரமாக கரைக்கு வர வேண்டும் என தன் கழுத்தில் தொங்கும் மஞ்சள் நிற தாலி கயிற்றை கண்ணில் வைத்து இறைவனை வேண்டலாம் ..
** மழையில் நனைந்து விட்ட விறகுகட்டையே அடுப்பிற்குள் திணித்து அதை பற்ற வைக்க தன் பாதி உயிரை கொடுத்து ஊதி கொண்டிருக்கலாம் அந்த கிளவி ...
** ஐடி தொழில்நுட்பத்தில் வேலை பார்க்கும் பெண் ஒருத்தி கையில் தேநீர் கோப்பையுடன் அந்த கண்ணாடி மாளிகையிலிருந்து வேடிக்கை பார்க்கலாம்...
** ஆற்றின் ஓரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை அறிவிக்கப்படலாம்..
** கையில் பிடிக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருக்கும் நடிகையின் கால்சீட் பெற்று படப்பிடப்பு நடந்துகொண்டிருக்கும் போது ..மழையின் குறுக்கீட்டால் பேக் அப் என டைரக்டர் கத்த ..வேறு வழி இல்லாமல் தயாரிப்பாளர் கவலையடையலாம்..
** டேய்...நம்ம மாவட்டத்துக்கு இன்னிக்கு ஸ்கூல் லீவு டா ...என மகிழ்ச்சியில் பள்ளி மாணவன் துள்ளி குதிக்கலாம்...
** என்னடா ...? நம்ம மாவட்டத்துக்கு லீவு இல்ல என நண்பன் கவலையடைய...இந்த செய்தி வாசிக்கிற ஆளு சரியில்லடா...இவருக்கு முன்னாடி இருந்த ரமணன் லீவு விட்டுட்டு தான் மழை வருமா ? வராதானே? சொல்லுவாரு..என அவனை தேற்றிக் கொண்டிருக்கலாம்....
** மர குடிசையில் ஒழுகும் நீருக்காக ஒரு பாத்திரத்தை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் அம்மாவை....யம்மா...அங்கேயும் ஒழுகுதுனு பிள்ளை சொல்லலாம் !
** கையேந்திபவன் கடையின் முதலாளிகள் எல்லாம்...இன்னிக்கு பொழப்பு போச்சுனு கவலையடையலாம்..
**சாதி,மத வேறுபாடு மறந்து.. மழைக்காக அத்தனை சாதியினரும் ஒரே இடத்தில் தஞ்சம் அடையலாம்...
** மின்சாரதுறை அதிகாரி..மழை வருதா ? அங்க வையர் கட் ஆயிடுச்சு..இங்க கட் ஆயிடுச்சு என போன் வருமே ..என சலித்துக் கொள்ளலாம்...
** வெளியே செல்வதற்காக...குடையே தேடி கொண்டிருக்கலாம் பெரியவர் ஒருவர்...
** குளிருக்கு இதமாக ...தலையனைக்கு அடியில் மறைத்து வைத்திருக்கும் சிகரெட்டை பாத்ரூமிற்கு கொண்டு சென்று ..வட்டம் வட்டமாக புகையிடலாம் அந்த இளைஞன்...
** மாடியில் நேற்று காய்வதற்காக போட்ட துணியே அள்ள மூச்சு வாங்க மாடி படியில் ஏறிக் கொண்டிருக்கலாம்..
** கடைக்கு சென்ற பெண் ...முழுவதுமாக
நனைந்து ..அவளது ஆடை தோலுக்கு தோலாக காட்சியளிக்க...அந்த கவர்ச்சியே சீண்டும் ஓநாய்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள வேகமாக வீட்டை நோக்கி நடக்கலாம்..
** மச்சான் ....செம க்ளைமேட்... பீர் அடிக்கலாம் வாடா என நண்பனை போன் போட்டு துணைக்கு ஆள் சேர்க்கலாம்....
** அமைச்சர் பெருமக்கள் எல்லாம்..போன வருடம் மாதிரி மழை பெய்து அரசுக்கு களங்கம் ஏற்படுத்திட வேண்டாம் என வருணபகவானை வணங்கி கொண்டிருக்கலாம்....
** மழையிலிருந்து தன் ஆண்ட்ராய்டு மொபைலை காப்பாற்ற பாலித்தீன் பைக்குள் சுருட்டி வைத்துக் கொண்டிருக்கலாம்...
** குடை பிடித்து நடந்து சென்று கொண்டிருக்கும் போது..எதிரே வந்த கார்.. பள்ளத்தில் சீறும் போது ...தன் சட்டையில் படிந்த சேறினால்..அந்த கார் ஓட்டியே வசை பாடலாம் ஒருவர்...
** கொட்டும் மழையிலும்..ரெயின் கோர்ட் அணிந்து தன் கடமையே ஆற்றும் டிராபிக் போலீஸ்..
** பைக்கில் சுற்றிய காதலர்கள்...மழைக்காக ஒதுங்க ..அங்க அவர்கள் தோல் உரசி ...புதியதாக முத்த மழை அங்கே பெய்யலாம்...
** வகுப்பறையில் ப்ரேக் முடித்து விட்டு வந்த மூன்றாம் வகுப்பு மாணவன்...கொஞ்சம் நேரம் கழித்து...டீச்சர்..ஒன்னுகு வருது ! என கேட்க.... தோழிகள் சிரிக்க...டீச்சர் இப்பதானாட போய்ட்டு வந்த என அரட்ட..அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டிருக்கலாம்...
** மழையிலிருந்து வீட்டிற்குள் சேற்றுகாலுடன் உள்ளே நுழையும் கணவன்மார்களை ,மனைவிமார்கள் வறுத்துக் கொண்டிருக்கலாம்...
** அப்பா ! ஆபீஸ் க்கு ...குடை எடுத்துட்டு போகல..பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்றேன்...சீக்கிரம் வாங்க என செல்ல மகள் அப்பாவிடம் போன் செய்து கொண்டிருக்கலாம்
** மழை வந்ததுமே ! இரண்டு மூன்று போர்வைகளை உடல் முழுக்க சுற்றிக்கொண்டு தூங்கும் வேலையில்லா பட்டதாரிகளும் இருக்கலாம்..
** உதவியாளரை அழைத்து, நம்ம வாத்தியார் கடையில சூடா ஒரு ரெண்டு மிளகாய் பச்சி,ஒரு கீரின் டீ வாங்கிக்கிட்டு உங்களுக்கும் ஏதாவது வாங்கிக் கொள்ளுங்கள் என தன் சட்டை பையிலிருந்து பணத்தை எடுக்கலாம் ..பேங்க் மேனேஐர்...
** கொட்டும் மழையிலும், சிக்கனலுக்காக காத்திருக்கலாம்..மெட்ரோ வாகன ஓட்டிகள்.
** பெண்ணின் சுதந்திரத்தை காட்ட ஆசைதீர மொட்டை மாடி மழையில் நனைந்து தீர்த்துக் கொண்டிருக்கலாம்..
** இன்னும்,ஏதோ ஒரு மூலையில்...நமது மனித உலக பாரம்பரியமான காகித கத்தி கப்பல் செய்து நீரில் விடலாம்...
** அடேய்...போதும்டா...என இந்த பதிவை மூடி விட்டு மழையே நீங்களும் ரசிக்க தயாராகலாம்..!