Monday, 30 October 2017

"மழையும் ! இவர்களும் ! "

அரை மணி நேரமாக மழையே வேடிக்கை பார்த்த நான்...என்னைப் போல் மற்றவர்கள் இதை நேரத்தில் என்ன செய்வார்கள் ...என்று எண்ணி..
       
              "மழையும் ! இவர்களும்! "

** பயிர் இடுவதற்காக நிலத்தை உழுது கொண்டிருந்த உழவன் ..முதல் மழைத்துளி அவன் வேர்வை படிந்த மார்பில் விழுந்த கணம் ...தலையில் இருந்த துண்டை கழற்றி..வானத்தை பார்த்து கை எடுத்து கும்பிட்டு..மண்ணை பூசிக் கொள்ளலாம்..நெற்றியில் !

** கடலுக்கு மீன் பிடிக்க சென்ற கணவன் பத்திரமாக கரைக்கு வர வேண்டும் என தன் கழுத்தில் தொங்கும் மஞ்சள் நிற தாலி கயிற்றை கண்ணில் வைத்து இறைவனை வேண்டலாம் ..

** மழையில் நனைந்து விட்ட விறகுகட்டையே அடுப்பிற்குள் திணித்து அதை பற்ற வைக்க தன் பாதி உயிரை கொடுத்து ஊதி கொண்டிருக்கலாம் அந்த கிளவி ...

** ஐடி தொழில்நுட்பத்தில் வேலை பார்க்கும் பெண் ஒருத்தி கையில் தேநீர் கோப்பையுடன் அந்த கண்ணாடி மாளிகையிலிருந்து வேடிக்கை பார்க்கலாம்...

** ஆற்றின் ஓரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை அறிவிக்கப்படலாம்..

** கையில் பிடிக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருக்கும் நடிகையின் கால்சீட் பெற்று படப்பிடப்பு நடந்துகொண்டிருக்கும் போது ..மழையின் குறுக்கீட்டால் பேக் அப் என டைரக்டர் கத்த ..வேறு வழி இல்லாமல் தயாரிப்பாளர் கவலையடையலாம்..

** டேய்...நம்ம மாவட்டத்துக்கு இன்னிக்கு ஸ்கூல் லீவு டா ...என மகிழ்ச்சியில் பள்ளி மாணவன் துள்ளி குதிக்கலாம்...

** என்னடா ...? நம்ம மாவட்டத்துக்கு லீவு இல்ல என நண்பன் கவலையடைய...இந்த செய்தி வாசிக்கிற ஆளு சரியில்லடா...இவருக்கு முன்னாடி இருந்த ரமணன் லீவு விட்டுட்டு தான் மழை வருமா ? வராதானே? சொல்லுவாரு..என அவனை தேற்றிக் கொண்டிருக்கலாம்....

** மர குடிசையில் ஒழுகும் நீருக்காக ஒரு பாத்திரத்தை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் அம்மாவை....யம்மா...அங்கேயும் ஒழுகுதுனு பிள்ளை சொல்லலாம் !

** கையேந்திபவன் கடையின் முதலாளிகள் எல்லாம்...இன்னிக்கு பொழப்பு போச்சுனு கவலையடையலாம்..

**சாதி,மத வேறுபாடு மறந்து.. மழைக்காக அத்தனை சாதியினரும் ஒரே இடத்தில் தஞ்சம் அடையலாம்...

** மின்சாரதுறை அதிகாரி..மழை வருதா ? அங்க வையர் கட் ஆயிடுச்சு..இங்க கட் ஆயிடுச்சு என போன் வருமே ..என சலித்துக் கொள்ளலாம்...

** வெளியே செல்வதற்காக...குடையே தேடி கொண்டிருக்கலாம் பெரியவர் ஒருவர்...

** குளிருக்கு இதமாக ...தலையனைக்கு அடியில் மறைத்து வைத்திருக்கும் சிகரெட்டை பாத்ரூமிற்கு கொண்டு சென்று ..வட்டம் வட்டமாக புகையிடலாம் அந்த இளைஞன்...

** மாடியில் நேற்று காய்வதற்காக போட்ட துணியே அள்ள மூச்சு வாங்க மாடி படியில் ஏறிக் கொண்டிருக்கலாம்..

** கடைக்கு சென்ற பெண் ...முழுவதுமாக
நனைந்து ..அவளது ஆடை தோலுக்கு தோலாக காட்சியளிக்க...அந்த கவர்ச்சியே சீண்டும் ஓநாய்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள வேகமாக வீட்டை நோக்கி நடக்கலாம்..

** மச்சான் ....செம க்ளைமேட்... பீர் அடிக்கலாம் வாடா என நண்பனை போன் போட்டு துணைக்கு ஆள் சேர்க்கலாம்....

** அமைச்சர் பெருமக்கள் எல்லாம்..போன வருடம் மாதிரி மழை பெய்து அரசுக்கு களங்கம் ஏற்படுத்திட வேண்டாம் என வருணபகவானை வணங்கி கொண்டிருக்கலாம்....

** மழையிலிருந்து தன் ஆண்ட்ராய்டு மொபைலை காப்பாற்ற பாலித்தீன் பைக்குள் சுருட்டி வைத்துக் கொண்டிருக்கலாம்...

** குடை பிடித்து நடந்து சென்று கொண்டிருக்கும் போது..எதிரே வந்த கார்.. பள்ளத்தில் சீறும் போது ...தன் சட்டையில் படிந்த சேறினால்..அந்த கார் ஓட்டியே வசை பாடலாம் ஒருவர்...

** கொட்டும் மழையிலும்..ரெயின் கோர்ட் அணிந்து தன் கடமையே ஆற்றும் டிராபிக் போலீஸ்..

** பைக்கில் சுற்றிய காதலர்கள்...மழைக்காக ஒதுங்க ..அங்க அவர்கள் தோல் உரசி ...புதியதாக முத்த மழை அங்கே பெய்யலாம்...

** வகுப்பறையில் ப்ரேக் முடித்து விட்டு வந்த மூன்றாம் வகுப்பு மாணவன்...கொஞ்சம் நேரம் கழித்து...டீச்சர்..ஒன்னுகு வருது ! என கேட்க.... தோழிகள் சிரிக்க...டீச்சர் இப்பதானாட போய்ட்டு வந்த என அரட்ட..அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டிருக்கலாம்...

** மழையிலிருந்து வீட்டிற்குள் சேற்றுகாலுடன் உள்ளே நுழையும் கணவன்மார்களை ,மனைவிமார்கள் வறுத்துக் கொண்டிருக்கலாம்...

** அப்பா ! ஆபீஸ் க்கு ...குடை எடுத்துட்டு போகல..பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்றேன்...சீக்கிரம் வாங்க என செல்ல மகள் அப்பாவிடம் போன் செய்து கொண்டிருக்கலாம்

** மழை வந்ததுமே ! இரண்டு மூன்று போர்வைகளை உடல் முழுக்க சுற்றிக்கொண்டு தூங்கும் வேலையில்லா பட்டதாரிகளும் இருக்கலாம்..

** உதவியாளரை அழைத்து, நம்ம வாத்தியார் கடையில சூடா ஒரு ரெண்டு மிளகாய் பச்சி,ஒரு கீரின் டீ வாங்கிக்கிட்டு உங்களுக்கும் ஏதாவது வாங்கிக் கொள்ளுங்கள் என தன் சட்டை பையிலிருந்து பணத்தை எடுக்கலாம் ..பேங்க் மேனேஐர்...

** கொட்டும் மழையிலும், சிக்கனலுக்காக காத்திருக்கலாம்..மெட்ரோ வாகன ஓட்டிகள்.

** பெண்ணின் சுதந்திரத்தை காட்ட ஆசைதீர மொட்டை மாடி மழையில் நனைந்து தீர்த்துக் கொண்டிருக்கலாம்..

** இன்னும்,ஏதோ ஒரு மூலையில்...நமது மனித உலக பாரம்பரியமான காகித கத்தி கப்பல் செய்து நீரில் விடலாம்...

** அடேய்...போதும்டா...என இந்த பதிவை மூடி விட்டு மழையே நீங்களும் ரசிக்க தயாராகலாம்..!

Saturday, 28 October 2017

உழவுக்கு உயிரூட்டு

இறங்குவோம் நாமும்...
இறங்குவோம்...
சேற்றிலே நாமும் இறங்குவோம் !

தொடருவோம் நாமும்...
தொடருவோம்...
பாட்டனின் வேலையே இனிதே தொடருவோம் !

நெருங்குவோம் நாமும் ...
நெருங்குவோம்...
கலாம் கண்ட கனவே நெருங்குவோம்!

எங்கடா படிச்சான் ?..
இருந்தாலும் விதைச்சான் !
நமக்காகவே உழைச்சான் ...
மொத்ததையும் தொலைச்சான் !

வச்சு வச்சு திங்குறான்டா பழைய சோறா...
உனக்கு மட்டும் கேட்குதடா கூலிங் பீறா...

பருவம் பார்த்து விதைச்சான்டா நிலத்துல..
கடன் வாங்கியே தொங்குனான்டா கயித்துல....












டாக்டர் பிள்ளை ,போலீஸ் பிள்ளைனா ..
பெருமைப்படுறீயே !!
இன்னார் பிள்ளைனு சொல்ல மட்டும் வெக்கப்படுறீயே !!


வந்து வந்து விழுறீயடா இன்ஜீனியரு...
உனக்கு ...!
நிலாவிலும் வேலை இல்ல... வேணும்னா கேட்டு பாரு..


தெருக்கு தெரு வைக்கிற ஓவியா ஆர்மி...
போன போகுது !
உன்அறிவை கொஞ்சம் இந்த நிலத்துலையும் காமி....


Meme போட்டு மெர்சல் பண்ணது போதும் சாமி !!
முடிந்த அளவு உருவாக்கிடு பசுமை பூமி !!


அவனுக்கு தேவையிங்கறது எல்லாம் இங்க தண்ணீரு...
வானத்தை பார்த்து பார்த்தே
வந்து நிற்குது கண்ணீரு...


உழவனுக்கு கரம் கொடுப்போம் !
மண்ணிற்கு உயிர் தருவோம் ....

இறங்குவோம் நாமும்..
இறங்குவோம்....!



Saturday, 21 October 2017

கர்வம் அழிந்ததடி !!

அந்தி மாலைப்பொழுது...
இளஞ்சூட்டில் ஆவி பறக்கிறது !
என் வலது கையின் விரல்களுக்கிடையே...
அகப்பட்ட தேநீர் கோப்பையிலிருந்து !!

கருநிற புட்களை போல காட்சியளிக்கும் ..
தாடியை தடவிகொண்டு !
மூக்கு கண்ணாடியை சரி செய்து ..
ஜன்னல்லை திறந்து வெளி நீட்டுகிறேன் ...
என் இடது கையை !!

யாரோ ? தண்ணீர் தெளிப்பது போல் ..
மழைச்சாரல் என் கைகளில் விழுகிறது !
ஒரு கையில் உஷ்ணம் ...
மறு கையில் இதமாக ஒரு சுகம் !!
இதை விட சிறந்த தருணம் இருக்குமா ??

கர்வம் கொள்கிறேன் !!
இந்த மாலைப் பொழுதின் மயக்கத்திலே....
.
.
.
.
.
மறுநாளே ..நண்பகல் நேரம்...
கொளுத்தும் வெயிலுக்காக !
இளநீர் பருகுகிறேன் ...
பேருந்து நிழற்குடையின் நிழலில் நின்று !!

எப்போதும் போல்...
பேருந்து நிறுத்தத்தை தாண்டி..
நிற்கிறது ஓர் பேருந்து !
ஒரே ஒரு கிளவி மட்டும்..
சாக்கு பையுடன் இறங்குகிறாள் !!
அந்த நிறுத்தத்தில்..

ஏதோ ? ஒன்று ! அந்த ,
பேருந்தின் ஜன்னல் ஒர கம்பிகளுக்கிடையே பிரகாசிக்கின்றது !!
ஆம் ..ஓர் பதுமை அங்கே ...
இவளது பொலிவில் மங்கியது!
சூரியனின் பொலிவும் ...

பருகிக் கொண்டிருந்த இளநீர் !
தீர்ந்தப்பின்னும் ...இன்னும்....
உறிஞ்சுக் கொண்டிருக்கிறேன் மெய்மறந்து.
அந்த மட்டையே !!

உடலின் உஷ்ணம் அதிகரிக்கிறது !
இளநீர் உள்ளே போன பிறகும் ...
உஷ்ணத்திற்கு காரணம் ..அவளை ..
கண்ட காம மோகத்தினால் அல்ல !
ஓர் பிரபஞ்சத்தை கண்ணருகில்...
பார்த்ததால் !!

நேற்று தான் கர்வம் கொண்டேன் ...
அந்த...மாலைப் பொழுதின் மயக்கத்திலே !
இன்று உன்னால்...
அந்த கர்வம் அழிந்ததடி...
உன்னாலே ...
கர்வம் அழிந்ததடி !!!!
.
.
.
.
.

நடத்துனரின் விசில் சத்தம் !
அடுத்த நிறுத்தத்தை நோக்கி நகர்கிறது..
பேருந்து மெல்ல !!
ஆம் ! இந்த பேருந்து எங்கே போகிறது என்று தெரியவில்லை ...??
ஆனால் ! என் எஞ்சிய நாட்கள் இவளுடன்தான் போக வேண்டும் என ஏறிவிட்டேன் இந்த பேருந்தில் ....

அந்த பிரபஞ்சத்தை தரிசனம் செய்ய..
கட்டணம் 10 ரூபாய் !

கூட்டம் இல்லாத அந்த பேருந்தும்...
என் கற்பனைகளுக்கு !
விழாக்கோலம் போல் காட்சியளிக்கிறது ...
என் திருமண விழாவாக ...
அய்யோடா..என்ன அழகு அவ !!

அவளது தலை முடியை ..
ஆக்கிரமித்து இருக்கும் அந்த..
குண்டு மல்லிகை பூவிலும் !!
அவளின் அழகை கவுரவிக்கும் பொருட்டு.
அவளை படர்திருக்கும் அந்த ...
பட்டுசரிகையிலும் !!
நெற்றியல் இட்டிருக்கும் குங்குமச்சிமிலிலும் ..

ஒரு நிமிஷம் !! இந்த தோற்றத்தை....
இதற்கு முன் எங்கோ கண்டுள்ளேன் ?
அட....என் அழகு தங்கச்சி ....

இவ்வளவு காலம் கர்வம் கொண்டிருந்தேன்! தங்கச்சியின் அழகில் !!
அத்தனையும் ஒரிரு நொடியில்...
தகடுபொடியாக்கி விட்டாய் ...
உண்மையில் கர்வம் அழிந்ததடி !!
உன்னாலே ...
கர்வம் அழிந்ததடி !!.....
.
.
.
.
.
ஏதோ ? ஓர் பேருந்து நிறுத்தம் வருகிறது ...
விலகி இருந்த தலைமுடியை கோரி...
காதருகில் சொருகிக் கொண்டு !!
இறங்கிவிட்டாள் .!
கிறங்கிவிட்டேன் ..நானும் அந்த நொடியில் !! என்ன பொண்ணுடா அவ ...

முன்னோக்கி அவள் நடக்கிறாள் ...
அவள் நிழலிற்கு நிழலாக...
எனதும் நிழலும் குடை பிடித்து வருகிறது .!

சார் பதிவாளர் (register Office) அலுவலகத்திற்குள் நுழைகிறாள் ...
நுழைந்தது தான் தாமதம் ..!
அவளை மொய்க்கிறது
தோழிகளின் கூட்டம் .....
இவளின் முகத்திலும்
அப்படியொரு  புன்னகை !!!

நின்றுவிட்டேன் ...அந்த ...
அழகியே தூரத்திலிருந்து ரசிக்கலாம் என..!
அங்கு இருந்த வேப்ப மரத்தடியில் ...

அவள் அலுவலக அறைக்குள் போய் ...
26 நிமிடம் ஆகிறது..என் வயதைப் போல்..
நடக்கும்போது...காற்றில்..
அசைந்த அவளது கைகள் !!!
இப்போது...இப்போது.....??

இறுக்கமாக ஒருவனின் கையை பற்றிக்கொண்டு வருகிறது ....
அந்த அறையே விட்டு !!
நான் முன்பு கண்ட ..அத்தனை அழகும் !!
குறையாமலும்,கலையாமலும் இருக்கிறது...

என்ன ?? கூடுதலாக ...கழுத்தில்...
மாலையும்,தாலியும் காட்சியளிக்கிறது !!
ஒ.ஒ. கல்யாணம் அவளுக்குதான் போல..

அவளது கண்ணீல் கண்ணீர்...
இது பெயர் ஆனந்த கண்ணீர்ல !!!
எனது உதட்டோரத்தில் மெல்லிய புன்னகை !!!
இதுக்கு பெயர் என்ன ????

ஆஆஆஆஆஆஆஆஆஆ !

ம்ம்ம்ம்ம்ம்ம் !!! சரி ..

முதல் காதலும் முடிந்ததடி ....
என் கனவுகளும் சிதைந்ததடி....
உன்னால்
நான் கொண்ட அத்தனை....

கர்வமும் அழிந்ததடி .!!
பெண்ணே ...உன்னாலே....
என் கர்வம் அழிந்ததடி !!!

Sunday, 15 October 2017

தனிமை - my explanation!

முதலில் தனிமையே விரும்பாத கூட்டத்தினரின் கண்ணோட்டத்தில் ::::

தாயும் இருந்தும் , தந்தை இருந்தும் !
தனியாக தான் இருக்கிறான் !

தனிமை - தன் + இனிமை !

தன்னை மட்டும் நேசித்து இவர்கள் இனிமை அடைகிறார்களா ? இது சாத்தியாமா ?
எப்படியும் ஒரு நாள் ... இந்த தனிமை நேசிக்கின்ற அத்தனை கோமாளிகளுக்கும் தாரம் என்ற பெயரில் ஒருத்தி வர தான் போகிறாள் ! அப்போது என்ன செய்வார்கள் ? இவர்கள் எல்லாம் முன் ஜென்மத்தில் நாம் சொல்லும் வேற்று கிரவாசிகளாக தான் இருந்திருக்க வேண்டும்.

இவர்கள் அடிக்கடி சொல்லும் feeling it alone என்பது எல்லாம் விதாண்டவாதம் தான் ! Leave me alone என்பது தான் இவர்களின் தாரக மந்திரம் ....

தனிமையே நேசிப்பவன் எல்லாம் அறிவாளியாவோ ? பெரிய இவன் ! என்ற நெனைப்போ என்னமோ ? இவர்களுக்கு !!! சொந்த காரன கூட வேண்டா விருப்பாக தான் பார்ப்பார்கள் !

எதையும் வெளியில சொல்ல மாட்டங்க ..அத்தனை ஆசை ,கவலை,ஏன் ? மகிழ்ச்சியை கூட அடைத்து கொள்வார்கள் ! இவர்களுக்கு மட்டும் இதயத்தின் அளவு பெரியதோ ? ஒருநாள் வெடிக்க தான் போகுது .....

கிடைத்த வாழ்க்கையே வாழ தெரியாத பைத்தியங்கள் !

தனிமைவாதிகள் **::

இங்கு நாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் அல்ல ! ஒதுங்கி நிற்கவே ஆசை படுகிற கூட்டதினர் ...

உங்களை போல நாங்களும் எல்லாம் கொண்டவர்கள் தான் ...அம்மா,அப்பா,சொந்தம்,நட்பு,பாசம்,ஆசை,காதல்,கோபம் இன்னும் நீங்க எதை எல்லாம் வச்சு இருக்கீங்ளோ ? அது எங்களிடமும் இருக்கு ! என்ன ..இதுல எதுமே எங்களுக்கு முழுசா கிடைக்கலா ?

ஏங்கி போய் தான் இருக்கோம் ! ஏதாவது முழுசா கிடைச்சிடாதானு ? எங்களுடைய கனவு ,கற்பனை ,எதாவது நடக்காதனு தவிச்சு போய் இருக்கோம் ....
நாங்க இங்க அமைதியாக எல்லாம் இல்லை ! நிறைய பேசுகிறோம் ...எங்கள் மனதோடு,அந்த காற்று,இசை,புத்தகங்களோடு...

ஒன்னு நீங்க(தனிமையே விரும்பாதவர்கள்).... எங்களை புரிந்து கொள்ளுங்கள்..இல்லை ...நாங்கள் வாழ்க்கையே புரிந்து கொள்ளும் வரை எங்களை எங்கள் போக்கில் விட்டு விடுங்கள் !