இது கதை அல்ல !
கவிதை அல்ல !!
கற்பனைகள் அல்ல !!!
என் #மெய்யான_மெய்யே
தாயின் மடியில் தவம் கிடந்த நாட்கள் துளியும் ஞாபகமில்லை ..
தகப்பன் தன்னை தோளில் சுமந்த காலங்கள் இன்னும் வியப்பின் ஆச்சரிய கேள்விக்குறி தான் ..
அந்த மனுசனுக்கும் நம்ம மேல பாசம் இருக்குது ..அதை காட்டுகிற நிலைமையில் தான் இல்லை போல் ..
ஆனால் !!
இந்த நட்புகளுடன் இருந்த மணித் துளிகள் மட்டும் ...
நினைவலைகளாக ஆர்ப்பரித்துக் கொண்டே இருக்கு ...
நீச்சல் தெரியாத காரணமோ ? என்னமோ ?
அதில் இருந்து வெளிவர முடியாமல்
தத்தளித்துக் கொண்டே இருக்கிறேன் ..
எத்தனை எத்தனை நினைவுகள் !!
அதில்,ஒன்றாவது இனி நடக்காதா ?
என தவிக்கின்ற என் இதயங்கள் !!
****
என் எச்சியை ...
தாயை தவிர எவரும் ...
இவ்வளவு ரசித்திருக்க முடியாது !!
என்றிருந்தவனுக்கு செருப்படி கொடுத்தது
அந்த நட்புகளின் எச்சிகள் ...
அப்பன் வைத்த பெயரை மாற்றி ..
பட்டப் பெயர் வைத்தோம் !!
நமக்கு நாமே
கூப்பிட்டு பார்த்தால் கூட ...
அந்த பெயர் தான் நம்மை வசீகரிக்கிறது ..
பெரும்பாலும் ..
அந்தரங்க வார்த்தைகள் தான் எங்களை சூழ்ந்திருக்கும் !!
அது ஆகாயத்தையே சீண்டுமளவிற்கு
அனல் பறக்கும் ..
*****
இடையில் எப்போதாவது ..
முட்டிக் கொள்வோம் ..
மோதிக் கொள்வோம் ..
சட்டையே பிடித்துக் கொள்வோம் ..
ஆனால், கொஞ்ச நாளிலேயே !!
சின்னம்மா பாணியில் ..
ஒருவரையொருவர் ;
பார்த்துக் கொண்டும் ..
பேசிக் கொண்டும் ..
பல்லை இளித்துக் கொண்டும் ..
கை கோர்ப்போம் !!
என் உடன்பிறப்புக்கே ..
அனுமதியில்லை நான் பயன்படுத்துவதை
அவன் உபயோகிக்க !!
இவனுக்கு மட்டும் எப்படி கொடுத்தேன்
இவ்வளவு சுதந்திரத்தை ..
#சர்வமும்_தாராளமயம்
ஆனால், நட்புகளுக்குள் சொல்லப்படாமல்
ஒர் உடன்படிக்கை இருந்தது ..
வேறு என்னவாக இருக்கப் போகிறது ..
அந்த உள்ளாடையின் பயன்பாட்டை தவிர
****
நட்புகளின் அழுகையை வேடிக்கை பார்த்தது எல்லாம் ..
தந்தைகளின் மரணத்தில் தான் ...
அந்த வலிகளிலிருந்து
முதலில் நான் மீள வேண்டுமே ..
அப்புறம் தானே நண்பனை அழாதே என ஆறுதல் கூற முடியும் ..
வகுப்பறையில் அவர் !! (ஆசான் )
(எல்லாரையும் குறிப்பிடவில்லை )
பாடம் நடத்துவது போல் படம் காட்டுவார் ..
இங்கே கடைசி பலகையிலும்
படம் காட்டப்படும் .. இலவசம் தான் !!
ஆங்கில நாயகியின் ஆடையில்லா ஆட்டங்கள் ...
அவளின் முனகல் ஒலி கூட
Mute செய்யப்பட்டிருக்கும் ... என்பது வேற விஷயம் !!
நேரங்காலம் அறியாது
சாப்பிடுவோம் ....
கைவைக்காத டிபன் பாக்ஸ் இல்லை ..
வகுப்பு நேரத்தில் ..
கல்லமிட்டாயை கூட கடுகு போல தான் கடிப்போம் ..
சப்பாத்தியை கூட இட்லி போலத்தான் முழுங்குவோம் ..
(வெயிட் ..சிரிப்பு வருது ..அவனும் சிரித்திருப்பான் ..)
பசியில்லை என்றாலும் ..ருசிக்காகவே தின்ற நாட்கள் அது ...
இப்போது எல்லாம் !!
பசியும் இல்லை .. திங்கிற தீவணங்களில் ருசியும் இல்லை ..
******
தலையனை வேண்டாம் ..
தாய்மடி வேண்டாம் ...
அவன் உடல் மேனியும் ..
யானை வயிறு தொந்தியும் போதும் ..
துயில் கொள்ள ..
தினம் ஒரு நட்பு கிடைக்கத்தான் செய்கிறது ..
ஆனால், எதுவும் நான் தொலைத்த நட்புகளின் அருகில் கூட வராமல் தொலைவிலே நிற்கிறது ..
****
எனக்கு காதலி இல்லை ..
இப்படி எழுதிப் புலம்பிக் கொண்டே இருப்பதால் வரப்போகிற மனைவியும் நீடித்திருக்க வாய்ப்பில்லை ..
அந்த நட்பின் நினைவுகள் போதும் ..
எவ்வளவு சுகமான நினைவுகளாக இருப்பினும் ..
நினைத்துப் பார்த்தால் ..
மனதில் கனத்தையும் ..
விழி ஓரத்தில் கண்ணீரையும் தான் தருகிறது !!
எத்தனை எத்தனை நினைவுகள் !!
அதில்,ஒன்றாவது இனி நடக்காதா ?
என தவிக்கின்ற என் இதயங்கள் !!
தொடரும் என் நினைவலைகள் ..
No comments:
Post a Comment