Sunday, 17 June 2018

அ....ப்...பா...

மூத்தப் பிள்ளையா ..
முத்து பிறப்பானு ...
முன்கூட்டியே
தெரிஞ்சிருந்தாயா !! 😝

என் கால்மிதி
சைக்கிள் நகர்வில்
மூச்சிறைக்க
பின்னால் ஓடி வர ...

உன் மூச்சுக் காற்று
சத்ததைக் கேட்டு ...
டயரில் காற்று போச்சான்னு !
சிரிப்பை சிதறிய தருணம்
மூளையின் ஒரு மூலையில்
இன்னும் இருக்கு ...❤

சிறு வயதில் ..
குரல் உயர்த்தி ..
ஓங்கி அறைந்த
உன் கைகள் எல்லாம் ..

வயது ஏற ஏற ..
உயர்த்திய குரல் ஊமையாகவும் ..
அறைந்த கைகள் அணைத்துக் கொண்டதும் ..
இன்றுவரை புரியாத புதிர் தான் ..😵

நான் !!
பசின்னு நின்னது இல்ல ...
உன் !!
பசியை வெளியே சொன்னதில்லை ..🙇

பெயர் சொல்லும் பிள்ளையாவும் இல்ல
பெயரைக் கெடுத்த பிள்ளையாவும் இல்ல
பெயரளவிலே உன் பிள்ளையா இருக்கேன் ..😥

அந்த சனிக்கிழமை இராத்திரி
தார்ச்சாலையில
தள்ளுவண்டியில
நூறு வாழத்தாரை
ஒத்தையில
மூச்சு வாங்க தள்ளி
நிற்கையில !!
என் நினைப்பு வந்து
துணைக்கு கூப்பிடுக்கையில
தான் எல்லாமே தெரிஞ்சது !!

என் காலின் ரப்பர் செருப்புக்கும்..
உன் பாதத்தின் பித்த வெடிப்புக்கும் ..
உள்ள காதல் !!❤

என் கலர் சட்டைக்கும் ..
கறை படிந்து ..
ஓராயிரம் ஓட்டையில்
தெரியும் உன் மேனிக்கும்
உண்டான காதல் ..❤

நான்
முகம் பூசிய பவுடர் நாற்றத்துக்கும் ..
உன்
முகத்தில் வடிந்தோடிய வேர்வை வாசனைக்கும் ..
இடைப்பட்ட காதல் ...❤

முதலில்
தோளில் சுமந்தாய் ...
இன்றும்
தோழனாய் சுமந்துக் கொண்டிருக்கிறாய் ..❤

அக்கம் பக்கத்து
உற்றார் உறவினரெல்லாம் ..
ஒருசேர சொல்றான் ..

உன் அப்பன்
ரொம்ப உழைச்சிட்டான்
ஓய்வு கொடு என ..

நான் ஓய்வெல்லாம் தர போவதில்லை
வரம் தர நினைத்திருக்கேன் ..
என்னை பிள்ளையாய்
பெற்றமைக்கு அல்ல
எதிர்ப்பார்ப்பில்லா உழைப்பிற்காக

இவ்வளவு நாள் காத்திருந்தாய் ..
இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திரு ..
முருகன் மகன் முன்னுக்கு வருவான் !!❤❤

Tuesday, 12 June 2018

தீராத காதல் - 1 ..

அந்த மழலையின்
பொக்கை வாய் சிரிப்பினில் ..
தொலைத்த
பொக்கிஷத்தை தேடுவது
என்றுமே தீராத காதல் தான் ...

அடைமழைக்கான
அறிகுறியாய்
முதல் துளி மேனியில் விழ ..
அன்னாந்து
இமைமூடி இரண்டாம் துளிக்காக
காத்திருப்பது
என்றுமே தீராத காதல் தான் ..

பக்கத்திலேயே சுற்றித் திரியும்
பட்டாம்பூச்சியை
கையில் பிடிக்க
முயற்சித்து முயற்சித்து
தோற்றுப் போகையில்
எட்டிப் பார்க்கும்
தோல்வி புன்னகை
என்றுமே தீராத காதல் தான் ..

அப்பனாவதற்கு
சில காலமே இருக்கையில்
இன்றும்
அன்னையின் மடிக்கு
தவமிருப்பது
என்றுமே தீராத காதல் தான் ..

பிரிந்தவளோ ...
மறந்து போனவளோ ..
என்றாவது
அன்பின் கதவை தட்டுவாள்
என காத்திருப்பதும்
தீராத காதல் தான் ..

இலை உதிர்ந்த கிளையோ ..
கிளை உடைந்த மரமோ ..
எதுவாகிப் போயினும்
தளராது தாங்கும்
வேரின் அன்பு
என்றுமே தீராத காதல் தான் ..

பூக்காரி தான்
பறித்த பூக்களை
நூலில் ஒவ்வொன்றாக
இறுக்கி கொல்கையில்
அவை ..
தேன் சிந்தி
மலர்ந்த கதை
வாழ்ந்த கதையை சொல்வது
என்றுமே தீராத காதல் தான் ..

இருண்டுப் போயிருக்கும்
அம்மாவாசை இரவிலும் ...
தன் எழுத்தால்
நிலவை வரவழைக்க
முயலுபவனுக்கு
நிலவின் மேல்..
என்றுமே தீராத காதல் தான் ...

தன்னுடைய
இன்றைய முகம் காண
கடலிருந்தும்
குளமிருந்தும் ..
சாலையின் குழியில்
தேங்கிய மழைநீரில்
முகம் காணும்
நிலவின் குணம்
என்றுமே தீராத காதல் தான் !!