Tuesday, 12 June 2018

தீராத காதல் - 1 ..

அந்த மழலையின்
பொக்கை வாய் சிரிப்பினில் ..
தொலைத்த
பொக்கிஷத்தை தேடுவது
என்றுமே தீராத காதல் தான் ...

அடைமழைக்கான
அறிகுறியாய்
முதல் துளி மேனியில் விழ ..
அன்னாந்து
இமைமூடி இரண்டாம் துளிக்காக
காத்திருப்பது
என்றுமே தீராத காதல் தான் ..

பக்கத்திலேயே சுற்றித் திரியும்
பட்டாம்பூச்சியை
கையில் பிடிக்க
முயற்சித்து முயற்சித்து
தோற்றுப் போகையில்
எட்டிப் பார்க்கும்
தோல்வி புன்னகை
என்றுமே தீராத காதல் தான் ..

அப்பனாவதற்கு
சில காலமே இருக்கையில்
இன்றும்
அன்னையின் மடிக்கு
தவமிருப்பது
என்றுமே தீராத காதல் தான் ..

பிரிந்தவளோ ...
மறந்து போனவளோ ..
என்றாவது
அன்பின் கதவை தட்டுவாள்
என காத்திருப்பதும்
தீராத காதல் தான் ..

இலை உதிர்ந்த கிளையோ ..
கிளை உடைந்த மரமோ ..
எதுவாகிப் போயினும்
தளராது தாங்கும்
வேரின் அன்பு
என்றுமே தீராத காதல் தான் ..

பூக்காரி தான்
பறித்த பூக்களை
நூலில் ஒவ்வொன்றாக
இறுக்கி கொல்கையில்
அவை ..
தேன் சிந்தி
மலர்ந்த கதை
வாழ்ந்த கதையை சொல்வது
என்றுமே தீராத காதல் தான் ..

இருண்டுப் போயிருக்கும்
அம்மாவாசை இரவிலும் ...
தன் எழுத்தால்
நிலவை வரவழைக்க
முயலுபவனுக்கு
நிலவின் மேல்..
என்றுமே தீராத காதல் தான் ...

தன்னுடைய
இன்றைய முகம் காண
கடலிருந்தும்
குளமிருந்தும் ..
சாலையின் குழியில்
தேங்கிய மழைநீரில்
முகம் காணும்
நிலவின் குணம்
என்றுமே தீராத காதல் தான் !!






No comments:

Post a Comment