Sunday, 24 March 2019

கற்பனைகளுக்கு அப்பால் ..

#இங்கு #கற்பனைகளுக்கு_அப்பால்

#கயிதை 👼

கற்பனைகளுக்கு அப்பால் ,
அது...
மலைகளால் சூழப்பட்ட தீவு
தீவின் நுழைவு வாயிலில்
அறிவிப்பு பலகையொன்று
ஆடையையும் ,மூளையையும்
கழட்டி வைத்து உள் வருகென !

உள் நுழைந்ததும்
கண்ணெதிரே
ராமசாமி ஐயரின் மாமிச கடை
இன்றைய ஸ்பெஷல் ,
பெண்ணுறுப்பை சிதைத்த
தடித்த ஆண்குறிகள்
10 % தள்ளுபடியில்

சற்றுத் தள்ளி
இங்குள்ளவர்களின் குலதெய்வமான
ஆர்மோனியப்பெட்டியுடன் ராஜாவின்
மண்சிலையொன்று ..

தீவின் மையத்தில்
ஒரு சொட்டுக் கடல்
கடலில் கும்மாளமாய்
மூன்று மகிழ்ச்சியான பன்றிக் குட்டிகளும்
கெழட்டு ஜோடியான நரிகளும்

கடலுக்கு வலப்புறம்
நிலப்பரப்பின் நுனிப்புல்லை மேய்ந்தவாறு
சில நூறு நெத்திலி மீன்கள்

இன்னொருப்புறம்
கட்டுக்குள் அடங்காத கூட்டமொன்று
அடகு கடைக்கு முன்னால்

விசாரித்தலில் தெரிய வந்தது ,
இங்கு ..
கண்ணீரை அடகு வைத்து
கஷ்டத்தை தீர்த்துக் கொள்வார்களாம்
சில நொடிகளுக்கு

அடகு கடையின்
கண்ணாடி பேழைக்குள்
கண்ணாடி குப்பிக்களுக்குள்
சேகரிக்கப்பட்ட கண்ணீர்த் துளிகள்

ஒவ்வொரு கண்ணீர் குப்பிகளும்
ஒருவரின் மரணத்திற்காக
ஒருவரின் பிரிவிற்காக
ஏதோ காரணத்திற்காக ..

தீவின் முக்கியத் தொழில்
பகல் நேரத்தில்
அந்தரத்தில்
சிதறிக் கிடக்கும்
மக்காத குப்பைகளான நட்சத்திரங்களை
படகில் சென்று
சுத்தம் செய்வது ...
அத்தனை சாதியினரும்
இங்கு துப்புரவு தொழிலாளர்கள்

தீவில் கோலாகலமாய்
திருமண விழாவொன்று ..
சிபுவின் முயற்சியால்
காதலர்களுக்கு
நிச்சயிக்கப்பட்ட திருமணமாக

இரத்தத் திரவியங்களை
உடல் முழுக்க தெளித்துக் கொண்டும்
காலில் மாட்டிய நகக்குப்பிகளில்
சிகப்புநிற நெயில்பாலிஷ் தீட்டிய படியும்
முன்பே வாங்கி வைத்த
மோதிரத்தை
தன் ஆடைக்குள் ஒளித்து வைத்தும்
மாப்பிள்ளை மிடுக்காய்
மணமேடை ஏறுகிறது
ஆண்குருவி

இதயத்தை கேட்டவள்
தன் இதயத்தை
தரப்போகின்ற நிலையை எண்ணி ,
மணமேடை ஏறி
வெக்கப்பட்டு சிரிக்கிறது
பெண் கழுகு

தம்பதிகளுக்கு
வாழ்த்து மடலாய் ..
என் கையொப்பத்துடன் ,

" அன்பால் வடிவமைக்கப்பட்ட உலகிது,
நம்மை வெறுப்பவர்களின்
கற்பனைகளுக்கு அப்பால்
அன்பு செய்வோம் , அவர்களிடத்திலும் .."

Monday, 11 March 2019

பொள்ளாட்சி கூட்டு பாலியல் தொல்லை

இப்பொழுதாவது #பேசுவோம் 

Speak about pollachi_rapist

*****************

அவளின் குரலாக ...

அன்பை கொட்டி
நம்ப வைக்கலாம் ..
அறிவை தீட்டி
அறைக்கும் அழைக்கலாம்
அடங்க மறுத்தா
அத்து மீறலாம் ..

கூட்டு பயலுக
கூட்டமாய் முன்  நிற்க ..
அந்த நொடியிலேயே
பாதி உயிரும் போக ..
அழுது அழுது
காலில் விழுந்து கரைந்து போனாலும் ..
அரக்க கண்களுக்கு
பெண் எல்லாம்
பொம்மை தான் ..

கத்தி கதற
தெம்பு இல்ல ..
இன்னும் கெஞ்ச
கண்ணுல தண்ணீர் இல்ல ..
கழட்டி எறிந்த ஆடையும்
கனத்து போச்சு ..
பிடியில் சிக்கிய உடம்பும்
மறத்து போச்சு ..
வெளியில் சொல்லவும்
திராணி இல்ல ..
மாண்டு போகவும்
உசிரு இல்ல ..

அதிகாரம் இருந்தால்
அடிவயித்துல எட்டி மிதிக்கலாம் ..

காமிரா இருந்தால்
கண்டபடியும் படம் பிடிக்கலாம் ..

கூட்டணி கட்சிகளெல்லாம்
முக்கியச் செய்தி ..
கூட்டுப் பலாத்காரமெல்லாம்
விரைவுச் செய்தி ..

இத்தனைக்கு பின்னும் ,
நீ ஏன் போனனு தான்
கேட்குற ..
அவனை கேள்வி கேட்க
ஏன் பயப்புடுற ?

சட்டத்தின் ஓட்டையெல்லாம்
பெண்ணின் யோனியா ..
ஆண்குறி உள்ளிருந்து
தப்பி பிழைத்தது போல்
மரண பிடியிலிருந்து
நீயும் தப்பிக்க ..