Monday, 11 March 2019

பொள்ளாட்சி கூட்டு பாலியல் தொல்லை

இப்பொழுதாவது #பேசுவோம் 

Speak about pollachi_rapist

*****************

அவளின் குரலாக ...

அன்பை கொட்டி
நம்ப வைக்கலாம் ..
அறிவை தீட்டி
அறைக்கும் அழைக்கலாம்
அடங்க மறுத்தா
அத்து மீறலாம் ..

கூட்டு பயலுக
கூட்டமாய் முன்  நிற்க ..
அந்த நொடியிலேயே
பாதி உயிரும் போக ..
அழுது அழுது
காலில் விழுந்து கரைந்து போனாலும் ..
அரக்க கண்களுக்கு
பெண் எல்லாம்
பொம்மை தான் ..

கத்தி கதற
தெம்பு இல்ல ..
இன்னும் கெஞ்ச
கண்ணுல தண்ணீர் இல்ல ..
கழட்டி எறிந்த ஆடையும்
கனத்து போச்சு ..
பிடியில் சிக்கிய உடம்பும்
மறத்து போச்சு ..
வெளியில் சொல்லவும்
திராணி இல்ல ..
மாண்டு போகவும்
உசிரு இல்ல ..

அதிகாரம் இருந்தால்
அடிவயித்துல எட்டி மிதிக்கலாம் ..

காமிரா இருந்தால்
கண்டபடியும் படம் பிடிக்கலாம் ..

கூட்டணி கட்சிகளெல்லாம்
முக்கியச் செய்தி ..
கூட்டுப் பலாத்காரமெல்லாம்
விரைவுச் செய்தி ..

இத்தனைக்கு பின்னும் ,
நீ ஏன் போனனு தான்
கேட்குற ..
அவனை கேள்வி கேட்க
ஏன் பயப்புடுற ?

சட்டத்தின் ஓட்டையெல்லாம்
பெண்ணின் யோனியா ..
ஆண்குறி உள்ளிருந்து
தப்பி பிழைத்தது போல்
மரண பிடியிலிருந்து
நீயும் தப்பிக்க ..



No comments:

Post a Comment