** Soup boy - words **
அவள் ..
வருகைக்கு முன் !!
கனவு கண்டுக் கொண்டிருந்தேன் ...
.
.
அவள் ..
வருகைக்குப் பின் !!
கண்ட கனவுகளில் வாழ்ந்துக் கொண்டிருந்தேன் ..
.
.
அவள் ..
போன பிறகு தான் !!
என் வாழ்க்கையே வாழப்போகிறேன் ..
**
அவள் மீது ..
அன்பை செலுத்துங்கள் !!
கொட்டி விடாதீர்கள் ..
திரும்ப அள்ள எல்லாம் முடியாது ..
நீங்கள் கொட்டிய அன்பை
காற்றடிக்கும் திசையில் !
பறக்கச் செய்திருப்பாள் ..
அவள் !!
**
மை லார்ட் ..
சிற்றின்ப பட்டியலில் ..
அவள் காதலையும் சேர்த்து விடுங்கள் !!
**
நீங்கள் அப்ப அப்ப
தருவதை / தந்ததை எல்லாம் ..
அவளும் தர வேண்டும் ..என
எதிர்ப்பார்க்காதீர்கள் !!
கடைசியில் மொத்தமாக ஒன்று தருவாள் ..
வாங்கிக் கொள்ள .. Sorry ..
தாங்கிக் கொள்ள தயாராகுங்கள் ..
**
நான் எப்பவும் ராவா ... தான் ?
ஏனா ?
என் மனசு பூரா.... அவளே தான் !!
**
அவள் பிரிவினால் தான் ..
முதன் முறையாக
விரல்களுக்கு இடையே சிகரெட்டை பற்றவைத்தேன் !!
காரணமிருக்கிறது ...
நான் ஊதித் தள்ளும் புகை காற்றில் மறைவது போல ..
அவள் நினைவுகளும் மறையட்டும் என்றுதான் !!
**
அப்போது ...
எங்கே பார்த்தாலும் அவள் முகம் !!
இப்போது..
எங்கே தேடியும் அவளே காணும் !!
ஒளிந்திருந்து விளையாடுகிறாளோ ?
காதல் விளையாட்டாக இருந்தால் சரி..
என் வாழ்வில் விளையாடுவதாக இருந்தால் ??
**
கொள்ளையடிக்க வந்தவளே ..
கொள்ளை அடித்து விட்டு போயிருக்கலாமே ??
ஏனடி ?
கொன்று விட்டு போகிறாய் ..
**
அவள் ...
மாடு ! மாடு ! என்றழைக்கும் போது ..
செல்லமாக அழைக்கிறாள் என்றிருந்தேன் !
இப்போது தான் காரணம் தெரிகிறது ..
அவளின் நினைவுகளை
முழுங்கவும் முடியாமல் ..
துப்பவும் முடியாமல் ...
அசைப் போட்டுக் கொண்டிருக்கிறேன் ..
நல்ல எருமை மாடாக !!
**
தூங்கும் போது கூட
அலைபேசியை காதருகே தான் வைத்துள்ளேன் !!
அவளின் மறதினால் ..
தெரியாதனமாக கூட அவளிடமிருந்து ..
அழைப்பு வந்துவிடுமோ ? என
காத்திருக்கிறோம்... நானும் !
என் அலைபேசியும் ..
**
என் காதல் பொல்லாதது ...
எப்படியும் ஒருநாள் என்னை எண்ணுவாய் !!
உன் விழியோரம் நீர் ததும்பும் ..
சிந்தினாலும் பரவாயில்லை ..
கவலை கொள்ளாதே .. கண்மணியே !!
அப்போதும்
அதை துடைக்க ...
உன் கழுத்தை தவழும் துப்பட்டாவாகவோ !
உன் மேனி சூழ்ந்த புடவையாகவோ !
எப்போதும் போல் உன் கைக்குள் அகப்பட்ட ..
கைக்குட்டையாகவோ !!
நானே இருப்பேன் ..
**
மறவாதே கண்மணியே .. என்னை அல்ல ..என் காதலே !! என்னை விட எந்த கொம்பனும் உன்னை இவ்வளவு நேசித்திருக்க மாட்டான் என ..
** மங்களம் _உண்டாக்கடும் **
No comments:
Post a Comment